Monday, September 15, 2025
Huisதாயகம்ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை விசாரணை அறிக்கை வவுனியாவில் விநியோகம்..!

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை விசாரணை அறிக்கை வவுனியாவில் விநியோகம்..!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் விசாரணை அறிக்கை வவுனியா ஊடகவியலாளர்களால் விநியோகிக்கப்பட்டது.

வவுனியா இலுப்பையடி பகுதியில் வைத்து இன்று (10.09.2025) பொதுமக்கள், வர்த்தகர்கள், சாரதிகள் ஆகியோருக்கு இவ் அறிக்கை விநியோகிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை அறிக்கை மற்றும் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய குறித்த அறிக்கை விநியோகிக்கப்பட்டது

இதில் வவுனியா ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ரெட்ரெஸ் மற்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் இணைந்து வெளியிட்டுள்ள 70 பக்க விரிவான புதிய அறிக்கையில்,

இலங்கையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் திட்டமிட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

2000 – 2010 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் உள்நாட்டுப் போர் குறித்து செய்தி அறிக்கையிட்டு வந்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களின் சுமார் 44 பேர் கொல்லப்பட்டனர்.

இருப்பினும் இன்று வரை இப்படுகொலைகளுடன் தொடர்புடைய எந்தவொரு குற்றவாளியும் பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை என அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!