கொட்டாஞ்சேனை மாணவி விடயத்தில் முதலாவது சம்பவம் இடம்பெற்ற உடனேயே அது தொடர்பில் உரிய முறையில் தகவல் பதிவாகவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (09) இ்டம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
“இந்த விடயம் சரியான முறையில் பதிவாகவில்லை என்பது தொடர்பிலும், சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் தொடர்பில் எதற்காக உரிய முறையில் தகவல் வழங்கவில்லை என்பது தொடர்பிலும், கொட்டாஞ்சேனை மாணவி பயின்ற பம்பலப்பிட்டியில் உள்ள மகளிர் பாடசாலையின் அதிபரிடமும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமல் தடுப்பதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, காவல்துறை ஆகிய தரப்புகள் அடங்கும் வகையிலான செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இவ்வாறான சம்பவம் பதிவாகுமாயின் குறித்த நான்கு நிறுவனங்களும் அறிந்திருக்க வேண்டும் என்ற வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது” என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பிரதமர் கூடிய குறித்த விடயம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.