Wednesday, February 5, 2025
Huisதாயகம்வவுனியாவில் கல்வித் தகமையினை உறுதிப்படுத்தத் தவறியதால் பதவியிழந்த GS..!

வவுனியாவில் கல்வித் தகமையினை உறுதிப்படுத்தத் தவறியதால் பதவியிழந்த GS..!

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றிய கிராம சேவகர் ஒருவர் தனது கல்விச் சான்றிதழை உறுதிப்படுத்த தவறியமையால் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு கிராம சேவகராக நியமனம் பெற்ற ஒருவர், தனது மூன்று வருட நிறைவில் பதவியினை உறுதிப்படுத்த வேண்டும். பரீட்சை திணைக்களத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை

எனினும் குறித்த பதவியினை மூன்று வருடம் கடந்தும் தாமதாக கடந்த வருடமே குறித்த கிராம அலுவலர் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன் போது குறித்த கிராம அலுவலர் நியமனத்திற்காக சமர்ப்பித்த க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றை பரீட்சை திணைக்களத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இதனையடுத்து குறித்த கிராம அலுவலர் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!