Wednesday, February 5, 2025
Huisதாயகம்சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள்; கடற்படையால் மீட்பு..!

சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள்; கடற்படையால் மீட்பு..!

கிளிநொச்சி சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கிய நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கரையொதுங்கிய உருளை வடிவிலான மர்மப் பொருளில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுத்துக்கள் தெளிவற்ற நிலையில் காணப்படுகின்றது.

இதனடிப்படையில் குறித்த மர்ம பொருளானது சீரற்ற காலநிலையால் கரையொதுங்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அண்மைக் காலமாக வடக்கு கடற்பரப்பில் பல்வேறு விதமான மர்ம பொருட்கள் கரையொதுங்கி வருகின்றது.

இவ்வாறு கரையொதுங்கிய உருளை வடிவிலான மர்மப் பொருளை கடற்படையினர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதேவேளை மட்டக்களப்பு கடற்கரையிலும் இவ்வாறு ஒரு மர்மபொருள் ஒன்று கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!